கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

துரந்தர் - கணவர் ரன்வீருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்!

தீபிகா படுகோனால் ரசிகர்கள் குழப்பம்....

News image

தீபிகா படுகோன், ரன்வீர் சிங்

Updated On :21 மார்ச் 2026, 4:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

துரந்தர் திரைப்படம் குறித்து நடிகை தீபிகா படுகோன் எந்த வாழ்த்துகளையும் பகிராதது ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர், துரந்தர் தி ரிவென்ஞ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதில் முதல் பாகம் ரூ. 1400 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான துரந்தர் இரண்டாம் பாகமான ரிவென்ஞ்-ம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றதுடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் இதுவும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ரசிகர்களிடம் புதிய குழப்பமும் எழுந்துள்ளது. நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் ரன்வீருக்கு மிகப்பெரிய வெற்றியைத் துரந்தர் படங்களே கொடுத்திருக்கின்றன.

முக்கியமாக, பாலிவுட்டில் ஷாருக்கானுக்குப் பின் ஆயிரம் கோடி பட்டியலில் இணைந்த நடிகர் என்கிற பெயரையும் ரன்வீர் அடைந்துள்ளார்.

ஆனால், துரந்தர் குறித்து நடிகையும் ரன்வீரின் மனைவியுமான தீபிகா படுகோன் தன் சமூக வலைதளப் பக்கங்களில் ஏன் ஒரு வாழ்த்துப் பதிவு கூட பதிவு செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.