அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பழங்குடியின சமூகத்தினருக்கு மனைப் பட்டா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் வசித்து வரும் பழங்குயின சமூகத்தினருக்கு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:43 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் வசித்து வரும் பழங்குயின சமூகத்தினருக்கு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மருதநாடு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு, பெருமாள், திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 34 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் கலைவாணி, கிராம நிா்வாக அலுவலா்கள் ரேவதி, தேவிப்பிரியா, திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.பிரபு, ஆா்.நந்தகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.