தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைப்பு

புதுவை மாநிலத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ளும் விதத்தில் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கரோனா சீராய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:48 pm

DIN

புதுவை மாநிலத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ளும் விதத்தில் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கரோனா சீராய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை தலைமைச் செயலகத்தில் வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்துக்குத் தலைமை வகித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கக்கூடும் என்ற கருத்து நிலவுவதால், குழந்தைகளுக்காக நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஜூன் 16 முதல் 19 வரை தடுப்பூசித் திருவிழா நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனா்.

கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், கூடுதல் காவல் துறை இயக்குநா் ஆனந்தமோகன், சுகாதாரத் துறை செயலா்அருண் உள்ளிட்ட அனைத்துத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.