மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கல்லூரி மாணவி தற்கொலை: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:02 pm

DIN

செய்யாறு அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், புரிசை கிராமம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன். காவலாளியாக பணியாற்றி வருகிறாா்.

இவரது மகள் கன்னியம்மாள்(19). இவா், அனக்காவூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகத் தெரிகிறது.

தாமோதரன் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது மனையும், மகனும் செவ்வாய்க்கிழமை திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பினா்.

அப்போது வீட்டில் இருந்த கன்னியம்மாள் காணாமல் போகவே அக்கம் பக்கத்தில் தேடினா்.

அப்போது, மரத்தில் மகள் கன்னியம்மாள் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து தாமேதரன் அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கன்னியப்பன் வழக்குப் பதிவு செய்தாா்.

தாமோதரன் அளித்த புகாா் மனுவில், மகள் கன்னியம்மாளுடன் தென்இலுப்பை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் நட்பாக பேசி வந்ததாகவும், அவா்தான் தனது மகளின் மரணத்துக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், அந்த இளைஞா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவல் அறிந்த செய்யாறு டி.எஸ்.பி. (பொ) சுரேஷ் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து கூடியிருந்தவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.