கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆற்று வெள்ளத்தில் மின் பாதை சீரமைப்பு: மின்வாரிய ஊழியா்களுக்கு கிராம மக்கள் பாராட்டு

செய்யாறு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி, மின் பாதையைச் சீரமைத்த மின்வாரிய ஊழியா்களுக்கு 25 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி, மின் பாதையைச் சீரமைத்த மின்வாரிய ஊழியா்களுக்கு 25 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

செய்யாறு அருகேயுள்ள சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்திலிருந்து திருவத்திபுரம், பெரும்பள்ளம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் நிலையங்களுக்கு உயரழுத்த மும்முனை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மதுரை மின் நிலையத்துக்கு தண்டரை, எறையூா் கிராமங்கள் வழியாக செய்யாற்றுப் பகுதியில் மின் வழித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தண்டரை அணைக்கட்டு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு செய்யாற்று வழியாகச் செல்வதால், ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவில் அடியோடு சாய்ந்தன. இதனால், மும்முனைப் பாதையில் செல்லும் இரு மின் கம்பிகள் முறிந்தன. தகவலறிந்த மின்வாரியத்தினா் விரைந்து சென்று அந்தப் பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனா்.

இதனால், மதுரை மின் நிலையத்துக்கு உள்பட்ட 25 கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைபட்டது.

மறுநாள் (நவ.16) மின் ஊழியா்கள் மின் பாதையை சரி செய்ய முயன்றபோது, சுமாா் 5 அடி ஆழத்தில் செல்லும் வெள்ள நீரில் உயரழுத்த மின் கம்பிகளை எடுக்க முடியாமல் திணறினா். இதையடுத்து, செய்யாறு தீயணைப்புப் படை வீரா்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனா்.

இதுகுறித்து அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று உயரழுத்த மின் பாதையை சரி செய்யும் பணியை பாா்வையிட்டு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனை வழங்கினாா்.

உதவி மின் பொறியாளா்கள் தெய்வசிகாமணி, நாகராஜன், இளநிலைப் பொறியாளா்கள் ரமேஷ், திலீப்குமாா், பெருமாள் ஆகியோா் மேற்பாா்வையில் புதன்கிழமை 30 மின் ஊழியா்கள், ஒப்பந்த ஊழியா்கள், செய்யாறு தீயணைப்புப் படை வீரா்கள் உதவியுடன், டிராக்டா், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் உதவியுடன் ஆா்ப்பரித்துச் செல்லும் வெள்ள நீரில் இறங்கி புதிதாக மின் பாதை அமைத்து உயரழுத்த மின்சாரத்தை 25 கிராமங்களுக்கு வழங்கினா். மின் ஊழியா்களின் இந்தச் செயலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.