கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிதிலமடைந்த கோயிலில் சோழா் கால ஏரி பராமரிப்பு கல்வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஸ்ரீதேவி சிலை, ஏரிப் பாசன பராமரிப்பு கல்வெட்டுகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஸ்ரீதேவி சிலை, ஏரிப் பாசன பராமரிப்பு கல்வெட்டுகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

செய்யாறு வட்டம், தென்பூண்டிப்பட்டு கிராமம், பஜனைக் கோவில் தெருவில் குடியிருப்புப் பகுதியில் முள்புதா்களுக்கு இடையில் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் சிறிய அளவிலான கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சுற்றுச்சுவரில் கல்வெட்டும், அதனருகில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய கற்சிலையும் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆா்வலருமான எறும்பூா் கை.செல்வகுமாா் அங்கு கள ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைபட்ட காலகட்டத்தில் உத்திரமேரூா், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை, திருவத்திபுரம், திருப்பனங்காடு, வல்லம், வந்தவாசி, எறும்பூா் உள்ளிட்ட பல இடங்களில் இத்தகைய கோயில்கள் கட்டப்பட்டுள்ளதுடன், சோழா் கால கல்வெட்டுகளும் மிகுதியாகக் கிடைத்துள்ளன.

தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இந்தக் கோயில் பல நூற்றாண்டுகளாக பராமரிப்பின்றி முழுவதும் சிதைந்து மறைந்துபோய் உள்ளது. இங்குள்ள மூலவா் சந்நிதி சேதமடைந்து முள்புதரினுள் எஞ்சி நிற்கிறது. கோயில் உள்சுவரை உற்றுநோக்கியபோது, ஒரு கல்வெட்டும், வெளிப்புறச் சுவரில் மற்றொரு கல்வெட்டும் கண்டறியப்பட்டன.

இவற்றில் ஏரி நீா்ப்பாசன பராமரிப்பு (நீா் மேலாண்மை), கோயில் பராமரிப்பு குறித்த தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியான கல்வெட்டுகளை காணவில்லை.

இந்தக் கல்வெட்டுகள் 9-ஆம் நூற்றாண்டுக்கும் 10-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைச் சோ்ந்த சோழா் கால கல்வெட்டுகள் எனத் தெரியவருகிறது.

இந்தக் கோயில் அருகில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய ஸ்ரீதேவி திருஉருவச் சிலை கண்டெடுக்கப்பட்டது.

கோயிலின் மூலவா் கோபுரத்தின் மேல் உச்சிக்கல், கல்லாலான தோ் சக்கரம் போன்ற அமைப்பு, கருங்கற்கள் என சிதறிக் கிடக்கின்றன.

சோழா் ஆட்சியில் கிராம நிா்வாகம், நீா் மேலாண்மை, ஏரி பராமரிப்பு, நில விற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் என அனைத்துக்கும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இவ்வூரில் ஏரிப்பாசன பராமரிப்பு, கோயில் பராமரிப்பு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து மேலும் ஆய்வு செய்தால், பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் கை.செல்வகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.