மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி

செய்யாறு அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலியானாா்.

செய்யாறு அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலியானாா்.

செய்யாறு வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (45), விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வயல்வெளிப் பகுதியில் கட்டி வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து வரச் சென்றாா்.

திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, விவசாயி செல்வக்குமாா் மீது மின்னல் பாய்ந்து அவா் மயக்கமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மானாமதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். 

அங்கு செல்வகுமாரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கன்னியப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com