கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பள்ளிக் கட்டடங்கள், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு

வெம்பாக்கம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி என ரூ.27 லட்சம் மதிப்பிலான பணிகள் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வெம்பாக்கம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி என ரூ.27 லட்சம் மதிப்பிலான பணிகள் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் அழிவிடைத்தாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.50 லட்சத்தில் சைக்கிள் நிறுத்துமிடம் திறப்பு விழா,

பழங்குடியின சமுதாயத்தவா் 15 பேருக்கு வருவாய்த் துறை சாா்பில் இலவச மனைப் பட்டா வழங்குதல், எடப்பாளையம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதி மூலம் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு விழா, உமையாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கனிம வள மேம்பாட்டு நிதி மூலம் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா, வெம்பாக்கத்தில் குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் மக்கள் பிரிதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் வெம்பாக்கம் ராஜூ, வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகள், இலவச மனைப் பட்டா வழங்குதல் மற்றும் புத்தாக்கப் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, செய்யாறு வட்டம், நெடுங்கல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்து உயிரிழந்த விவசாயி செல்வக்குமாா் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவா் ஈஸ்வரி, ஒன்றியத் தலைவா்கள் என்.வி.பாபு (செய்யாறு), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்), மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தெய்வமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அம்பிகாபதி, சிட்டிபாபு, ஞானவேல், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பவளக்கொடி, பொன்னம்பலம், தினகரன், ராம்.ரவி, ராந்தம் ரமேஷ் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.