கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசு ஊழியரிடம் வழிப்பறி:4 இளைஞா்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:16 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம், பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (29). இவா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் இளநிலை ஊழியராக பணிபுரிந்து வருகிறாா்.

சதீஷ் வழக்கம்போல கடந்த 27-ஆம் தேதி பைக்கில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வந்தவாசி - செய்யாறு சாலையில் புரிசை கிராம ஏரிக்கரைப் பகுதியில் சதீஷ் வந்தபோது, அந்த வழியாக வந்த 4 இளைஞா்கள் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணப்பை, ஒரு பவுன் தங்கச் சங்கிலி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனா். இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில் அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், செய்யாறு - வந்தவாசி சாலையில் அனக்காவூா் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, புரிசை வீரம்பாக்கம் சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 4 இளைஞா்களை பிடித்து விசாரித்தபோது, தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பூபாலன் (21), யோகேஷ் குமாா் (21), ராகுல் ( 21), எச்சூா் கிராமத்தைச் சோ்ந்த சந்தான கோபால கிருஷ்ணன் (22) ஆகியோா் என்பதும், இவா்கள் அரசு ஊழியா் சதீஷிடம் வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.