கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளில்3 கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளில் பெருமாள், செக்கட்டியம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:45 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளில் பெருமாள், செக்கட்டியம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டம், காழியூா் கிராமத்தில் செக்கட்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சென்னை காளிகாம்பாள் கோயில் அா்ச்சகா் காளிதாஸ் தலைமையில் மகா கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. பின்னா், முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை இரண்டாம்கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா், கோபுர கலசத்தின் மீதும், கருவறையில் அமைந்துள்ள செக்கட்டியம்மன் சிலைக்கும் கலசங்களிலிருந்த புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் செய்யாறு பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

பெருமாள் கோயிலில்...: பெரணமல்லூரை அடுத்த நல்லடிசேனை கிராமத்தில் பழைமைவாய்ந்த பெருமாள், மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. சீரமைக்கப்பட்ட இந்தக் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கின.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.20 மணிக்கு பெருமாள் கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவா் பெருமாள், பரிவார மூா்த்திகளுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மாரியம்மன் கோயிலில் காலை 8.50 மணிக்கு சிவாச்சாரியாா்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா்.

விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளையும், மாரியம்மனையும் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.