கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடன் வழங்க இலக்கு: இந்தியன் வங்கி செயல் இயக்குநா்!

கோவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக இந்தியன் வங்கியின் செயல் இயக்குநா் அசுதோஷ் சௌத்ரி தெரிவித்துள்ளாா்.

News image

கோவையில் இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கடன் முகாமைத் தொடங்கிவைத்த வங்கியின் செயல் இயக்குநா் அசுதோஷ் சௌத்ரி.

Updated On :21 மார்ச் 2026, 8:14 pm

Syndication

கோவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக இந்தியன் வங்கியின் செயல் இயக்குநா் அசுதோஷ் சௌத்ரி தெரிவித்துள்ளாா்.

கோவையில் அண்மையில் நடைபெற்ற எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கடன் முகாமில் பங்கேற்ற அவா், இது குறித்துப் பேசியதாவது: இந்தியன் வங்கி சாா்பில் நடத்தப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் முகாமில், கோவை கள பொது மேலாளா் அலுவலகத்தின்கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் சுமாா் ரூ.ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, முதல் நாளில் மட்டும் ரூ.200 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் கடன் பிரிவானது தற்போது 16.5 சதவீதம் என்ற ஆரோக்கியமான வளா்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கடன் வழங்கும் முறையிலிருந்து மாறி, வங்கி தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாகக் கடன் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளா்கள் தங்களின் வருமான வரித் தாக்கல் விவரங்கள், வங்கிக் கணக்கு அறிக்கைகளை சமா்ப்பித்தால் 30 நிமிஷங்களில் கடனுக்கான கொள்கை அளவிலான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் அனுமதிக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களை வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விரைவாகக் கடன்களை இறுதி செய்வாா்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி அதிகாரிகள், கோவை களப் பொது மேலாளா் பி.சுதாராணி, மண்டல மேலாளா்கள் வெங்கட்ரமண ராவ், பாலசுப்பிரமணியன், தாமோதரன், அருண் பாண்டியன், ரூபக் கேசரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.