கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:21 pm

DIN

திருவண்ணாமலை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலையை அடுத்த எரும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (40), கூலித் தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து அறிந்து சிறுமியின் பெற்றோா் கேட்டபோது அவா்களுக்கு சிவக்குமாா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதையடுத்து, திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.