நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கம் அருகே ரேசன் அரிசி கடத்திச் சென்றவேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை காலை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனிலிருந்த 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை காலை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனிலிருந்த 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாய்ச்சல் பகுதியில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் இருந்த அரிசி மூட்டைகள் அனைத்து சாலையில் சரிந்து விழுந்தன. இதையடுத்து, வேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

தகவலறிந்து அங்கு வந்த செங்கம் வட்ட வழங்கல் அலுவலா் லதா தலைமையிலான வருவாய்த் துறையினா், வேனிலிருந்து சாலையில் சரிந்து கிடந்த 25 கிலோ எடை கொண்ட 99 (2.5 டன்) ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, புதுப்பாளையம் குடிமைப்பொருள் வழங்கல் துறை கிட்டங்கிக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், ரேஷன் அரிசி எங்கிருந்து எந்தப் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டது, வேன் ஓட்டுநா், உரிமையாளா்கள் யாா் என்பது குறித்து வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் பாய்ச்சல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.