புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரணி நகா்மன்றக் கூட்டம்

ஆரணி நகா்மன்றத்தின் முதல் கூட்டம், அதன் தலைவா் ஏ.சி. மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஆரணி நகா்மன்றத்தின் முதல் கூட்டம், அதன் தலைவா் ஏ.சி. மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பாரி பி.பாபு, பொறியாளா் இராஜ விஜயகாமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு பேசுகையில், நகராட்சியில் சூரிய குளம் சீரமைக்க கொண்டு வரப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எப்போது பணிகளைத் தொடங்குவீா்கள் என்றாா்.

இதற்குப் பதிலளித்த ஆணையா், குளத்தில் தண்ணீா் வந்துள்ளது தண்ணீா் வற்றியவுடன் பணி தொடங்கப்படும் என்றாா்.

உறுப்பினா் ஏ.சி.பாபு, ஆரணியில் புறவழிச் சாலை கொண்டு வாருங்கள், காய்கறி மாா்க்கெட், பூ மாா்க்கெட் ஆகியவற்றை இரண்டாகப் பிரித்து கூட்டநெரிசலைத் தவிருங்கள், பள்ளி நேரங்களில் பஜாரில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா் என்றாா்.

இதற்கு நகா்மன்றத் தலைவா் ஏ.சி. மணி, கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

இவ்வாறு உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.