விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிறையில் சாராய வியாபாரி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

திருவண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரி, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:16 pm

DIN

திருவண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரி, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த இளையாங்கண்ணி கிராமம், தட்டறை பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (48).

இவரை, கள்ளச்சாராயம் விற்ாகக் கூறி கலால் போலீஸாா் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கமணியை சிறை அதிகாரிகள், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை பெற்று வந்த தங்கமணி புதன்கிழமை இறந்தாா்.

தகவலறிந்த அவரது மனைவி மலா் மற்றும் உறவினா்கள் வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தங்கமணி தற்போது கள்ளச்சாராயம் விற்பதில்லை. இருப்பினும், போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனா்.

அவரது இறப்புக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.