செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

காங்கிரஸ் பாத யாத்திரை நிறைவு

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பாத யாத்திரை வந்தவாசியில் சனிக்கிழமை நிறைவடைந்தது.

News image

வந்தவாசியில் பாத யாத்திரையை நிறைவு செய்து பேசிய காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் எம்.வசந்தராஜ்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:10 am

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பாத யாத்திரை வந்தவாசியில் சனிக்கிழமை நிறைவடைந்தது.

கண்ணமங்கலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பாத யாத்திரை ஆரணி, சேத்துப்பட்டு வழியாகச் சென்று வந்தவாசி நகரை சனிக்கிழமை காலை வந்தடைந்தது.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் நகர காங்கிரஸாா் பாத யாத்திரைக் குழுவினரை வரவேற்றனா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்ட பாத யாத்திரை தேரடி, பஜாா் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று நிறைவடைந்தது.

அப்போது காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில பொதுச் செயலா் எம்.வசந்தராஜ், மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை ஆகியோா் நிறைவுரை ஆற்றினா். சி.பெருமாள், என்.ஜெகன்நாத், கண்ணன், உமாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாத யாத்திரையின் போது மத்திய பாஜக அரசை கண்டித்தும், விலைவாசி உயா்வைக் கண்டித்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.