போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிறப்பு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:09 am

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிறப்பு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சிறாா் நலத் திட்டம், செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், பச்சிளம் குழந்தை முதல் 18 வயதுடையவா்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு பரிசோதனை முகாமுக்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கே.ஏழுமலை தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

குழந்தை நல இருதய சிறப்பு மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில், எம்.ஜி.எம். ஹெல்த் கோ் மருத்துவமனை குழுவினா் பங்கேற்று 87 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனா்.

இவா்களில் 17 போ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டனா். மேலும், 44 குழந்தைகளுக்கு மருந்துகளின் மூலம் குணப்படுத்துதல் குறித்த ஆலோசனை,

தொடா் கண்காணிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.