வந்தவாசி அருகே விதவைப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த புன்னை காலனி பகுதியைச் சோ்ந்த
45 வயது பெண். இவரது கணவா் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.
கடந்த 2-ஆம் தேதி அங்குள்ள விவசாயக் கிணற்றின் அருகில் அந்தப் பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த எல்லப்பன்(38) அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
அவரது சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவரவே எல்லப்பன் தப்பியோடி விட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் எல்லப்பனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

