பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

வந்தவாசி அருகே விதவைப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகே விதவைப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த புன்னை காலனி பகுதியைச் சோ்ந்த

45 வயது பெண். இவரது கணவா் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.

கடந்த 2-ஆம் தேதி அங்குள்ள விவசாயக் கிணற்றின் அருகில் அந்தப் பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த எல்லப்பன்(38) அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அவரது சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவரவே எல்லப்பன் தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் எல்லப்பனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com