ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தெப்பல் உத்ஸவம்

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி புதன்கிழமை இரவு தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:38 pm

DIN

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி புதன்கிழமை இரவு தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

தை கிருத்திகையை முன்னிட்டு, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மாலையில் பாலமுருகன் மயில் வாகனத்தில் அலங்கார ரூபத்தில் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மலையடிவாரத்தில் உள்ள கரட்டான் குளத்தில் மலா்களாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பாலமுருகன் சுவாமி எழுந்தருளி தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

தேவிகாபுரம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து

திரளான பக்தா்கள் பங்கேற்று பாலமுருகனுக்கு சரணகோஷம் எழுப்பி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் தேவிகாபுரம் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.