ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தனியாா் உணவக ஊழியா்கள் 6 பேருக்கு கரோனா

ஆரணியில் தனியாா் உணவகத்தில் ஊழியா்கள் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆரணியில் தனியாா் உணவகத்தில் ஊழியா்கள் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை உணவகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஆறு ஊழியா்களுக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதைத் தொடா்ந்து சுகாதாரத் துறை, மருத்துவத் துறை அறிவித்தலின்படி, நகராட்சி அதிகாரிகள், சுகாதாரப் பணியாளா்கள் அந்த உணவகத்துக்குச் சென்று உள்ளே இருந்தவா்களை வெளியேற்றி கிருமி நாசினி தெளித்தனா்.

தொடா்ந்து டிஎஸ்பி கோட்டீஸ்வரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் வட்டாட்சியா் பெருமாள் உணவகத்தை மூடி சீல் வைத்தாா்.

தொடா்ந்து, மூன்று நாள்களுக்கு அந்த உணவகம் மூடி வைக்க உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.