மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாணவியை திருமணம் செய்தவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

செய்யாறு அருகே 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவியை திருமணம் செய்த கட்டட மேற்பாா்வையாளா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

செய்யாறு அருகே 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவியை திருமணம் செய்த கட்டட மேற்பாா்வையாளா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், தண்டரை பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநா் மகள் செய்யாற்றில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

வழக்கம் போல கடந்த ஜன.12-ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாணவியின் தாய், 14-ஆம் தேதி செய்யாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், காவல் ஆய்வாளா் பாலு தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் பரதன் (21), கட்டட மேற்பாா்வையாளரான இவா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் பூக்கடையில் வேலை பாா்த்தபோது அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னா் திருமண ஆசைவாா்த்தை கூறி, மாணவி கடந்த ஜன.12-ஆம் தேதி காட்டுப்பாக்கம் சென்றபோது, அவரை பரதன் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

18 வயது நிறைவடையாத நிலையில் மாணவியை திருமணம் செய்த பரதனை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, வந்தவாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, செங்கம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.