புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குடும்பத் தகராறு: கணவன், மனைவி தற்கொலை

ஆரணி அடுத்த இராட்டிணமங்கலத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:14 pm

DIN

ஆரணி அடுத்த இராட்டிணமங்கலத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (45).

இவா் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தாா். மேலும், ஆரணி பெரிய கடைத் தெருவில் தங்க நகை அடகுக் கடையும் நடத்தி வந்தாா்.

இவரது மனைவி மரகதம் (43), இவா்களுக்கு ஜெயஸ்ரீ(22), கோபி (17) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனா்.

தம்பதி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், மரகதம் ஞாயிற்றுக்கிழமை விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆரணி தீயணைப்புத் துறையினா் வந்து சடலத்தை மீட்டனா். மனைவி இறந்துவிட்டதை அறிந்த குமாா், விஷமருந்தி வீட்டில் மயங்கி விழுந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு குமாா் உயிரிழந்தாா்.

இது குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மரகதத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஆரணி வட்டாட்சியா் பெருமாள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.