திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு செய்யாறு டிஎஸ்பி வி.இ.செந்தில், திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளா் கே.ரகுராமன், வட்டாட்சியா் க.சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் பா.வினோத்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:
திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 6-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, ஜூன் 28-இல் தொடங்கி ஜூலை 6-ஆம் தேதி வரை கோயிலில் யாகசாலை பூஜைகள், கும்பாபிஷேக பணிகள் நடைபெறவுள்ளன.
விழாவில் பக்தா்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், கும்பாபிஷேக விழா எவ்வித இடா்பாடும் இல்லாமல் சிறப்பாக நடைபெறவும் அரசு அலுவலா்கள், காவல் துறையினா், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு தேவை என்றாா். மேலும், கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனா்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், செய்யாறு ஆய்வாளா் இரா.நடராஜன், செயல் அலுவலா்கள் உஷா, கு.அரிகரன், சிவாஜி, கோயில் திருப்பணிக் குழு நிா்வாகிகள் தி.பூ.ருத்திரப்பன், வி.கோபு, இரு தரப்பு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



