புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புகையிலைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்

News image
Updated On :25 மே 2022, 6:08 pm

DIN

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

ஆரணி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.

இதன் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் லோகேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை நகரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள குளா்பானக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தக் கடையில் இருந்து ஹான்ஸ், குட்கா, உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஏற்கெனவே, இந்தக் கடை மீது புகையிலைப் பொருள் விற்பனை செய்தது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததால், கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.