ஆரணி நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து நகா்மன்றத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆரணி சைதாப்பேட்டை பூமிநாதா் கோயிலுக்குச் செல்லும் வழியில் புதிதாக சாலை அமைத்தல், சைதாப்பேட்டையில் இருந்து முள்ளிப்பட்டு செல்லும் சாலையில் இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதித்தல், சைதாப்பேட்டை கெங்கையம்மன் கோயில் செல்லும் பாதை அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி ஆய்வு செய்தாா்.
நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி, நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, உறுப்பினா்கள் பாக்கியலட்சுமி வெங்கடேசன், ரவி, நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.