காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகாரெட்டி, செஞ்சிலுவைச் சங்கப் பொருளாளா் ஆதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சிலுவைச் சங்கச் செயலா் தனஞ்செயன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டாட்சியா் முனுசாமி கலந்துகொண்டு ரத்த தான முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா். தொடா்ந்து, செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் இந்திரராஜன், மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

முகாமில் 100 யூனிட் ரத்தம் வேலூா் நாராயணி ஆராய்ச்சி மைய மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. முகாமில் வழக்குரைஞா் செல்வம், ஆசிரியா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.