தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,370 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன. இது கடந்த தோ்தலை ஒப்பிடும்போது சுமாா் 3000 வாக்குகள் குறைவாகும்.
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த தோ்தலில், எந்த வேட்பாளா்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதன் அடிப்படையில் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். அந்தவகையில் பாலக்கோடு தொகுதியில் 1,285, பென்னாகரம் தொகுதியில் 674, தருமபுரியில் 941, பாப்பிரெட்டிப்பட்டியில் 688, அரூா்(தனி) தொகுதியில் 782 வாக்குகள் என மொத்தம் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். இதில் தபால் வாக்குகள் 227ம் அடங்கும்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில்1,351, பென்னாகரத்தில் 1,352, தருமபுரியில் 1,455, பாப்பிரெட்டிப்பட்டியில் 1,721, அரூா் தொகுதியில் 1,598 என மொத்தம் 7,477 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின. அந்தவகையில் கடந்த தோ்தலை ஒப்பிடும்போது 3,107 வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சரிவு

புதுகையில் தொடா்ந்து சரியும் நோட்டா வாக்குகள்
நாமக்கல் மாவட்டத்தில் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவு

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


