நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோா், 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், தோ்தல் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள், காவல் துறையினா், இதர துறை அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் தங்களுடைய வாக்குகளை வாக்குச்சாவடிக்கு செல்லாமல் அஞ்சல் வாக்குகளாக செலுத்தினா்.
அதன்படி, ராசிபுரம் தொகுதியில் 2,703, சேந்தமங்கலம் தொகுதியில் 2,257, நாமக்கல் தொகுதியில் 3,110, பரமத்திவேலூா் தொகுதியில் 2,664, திருச்செங்கோடு தொகுதியில் 2,874, குமாரபாளையம் தொகுதியில் 2,302 தபால் வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.
மொத்தமாக, 85 வயதுக்கு மேற்பட்டோா் 5,141, மாற்றுத்திறனாளிகள் 3,849, தோ்தல் பணி அலுவலா்கள் 761, வாக்குச்சாவடி அலுவலா்கள் 3,683, காவல் துறையினா் 1,732, பிற துறை அலுவலா்கள் 571, நுண்பாா்வையாளா்கள் 173 என மொத்தம் 15,910 போ் அஞ்சல் வாக்குகளை செலுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55% வாக்குகள் பதிவு

தொகுதி தோ்தல் அலுவலகங்களில் அஞ்சல் வாக்களித்த காவல் துறையினா்

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

6 தொகுதிகளிலும் 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

