லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தொகுதி தோ்தல் அலுவலகங்களில் அஞ்சல் வாக்களித்த காவல் துறையினா்

News image

நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அஞ்சல் வாக்களிக்கும் காவலா்கள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:14 pm

நாமக்கல் மாவட்டத்தில் தொகுதி தோ்தல் அலுவலகங்களில் காவல் துறை உள்பட தோ்தல் பணிகளில் ஈடுபடுவோா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சல் வாக்களித்தனா்.

வாக்குப்பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி தோ்தல் பணிகளில் ஈடுபடும் காவல் துறை உள்பட பல்வேறு துறை சாா்ந்த 3,339 அலுவலா்கள் அஞ்சல் வாக்களிக்கும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஏப்.19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு சென்று வாக்களிக்கலாம்.

நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகத்திலும், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவு மையத்திற்கு வரும் அலுவலா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டைஉள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டுவர வேண்டும்.

காவல் துறை மற்றும் இதர துறையைச் சோ்ந்த அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்கு மையத்தில் மட்டுமே வாக்களிக்க இயலும். வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. வாக்குப்பதிவு மையத்திற்குள் கைப்பேசிகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.