தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்பயிற்சிகள் பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:05 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்பயிற்சிகள் பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04175-233047 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.