தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆசிரியா் கூட்டணி செயற்குழுக் கூட்டம்

கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேற்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் திலகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சா்தாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் அறிவரசு வரவேற்றாா்.

ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலா் சி.அ.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், செப்டம்பா் 10-ஆம் தேதி சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஜேக்டோ-ஜியோ மாநில மாநாட்டுக்கு கீழ்பென்னாத்தூா் ஒன்றியம் சாா்பில் பேருந்து, வேன்களில் ஏராளமானோா் சென்று பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கல்வி மாவட்டச் செயலா் ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவா் விஜயகுமாா், துணைச் செயலா் வினோத்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் சவுந்தர்ராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுரளி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.