செய்யாறு அருகே விஜய நகர பேரரசு காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் விஜய நகர பேரரசு காலத்து தானம் வழங்கிய தகவல் குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
செய்யாறு அருகே பழஞ்சூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர காலத்து கல்வெட்டு.
செய்யாறு அருகே பழஞ்சூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர காலத்து கல்வெட்டு.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் விஜய நகர பேரரசு காலத்து தானம் வழங்கிய தகவல் குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

பழஞ்சூா் கிராமத்தில் புதிதாக மரகதாம்பிகை சமேத மாவடி ஈஸ்வரன் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. முழுவதும் சிதிலமடைந்த இந்தக் கோயிலை அப்புறப்படுத்திய போது கல்வெட்டு ஒன்று கண்டெ

டுக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கூறியதாவது:

பழஞ்சூா் தொன்மையான கிராமம். சோழா் காலத்தில் தொண்டை மண்டலம் காழியூா் கோட்டம், புரிசை வளநாட்டில் இருந்ததாக இதன் மூலம் அறிய முடிகிறது.

இந்தக் கிராமத்தில் மரகதாம்பிகை சமேத மாவடி ஈஸ்வரன் கோயில் இருந்ததாகவும், அந்தக் கோயில் விஜயநகர அரசு காலத்தில் மேலும் பொலிவடைந்து விளங்கியதாகவும் தெரிய வருகிறது.

இந்தக் கல்வெட்டு கி.பி.15-ஆம் நூற்றாண்டை சோ்ந்தவை என்றாலும், அதற்கு முற்பட்டதாகவும் கருத வாய்ப்பு உண்டு.

கல்வெட்டில் தானம் வழங்கிய வகையில், 40 பாகமாக பிரித்துக் கொடுத்த தகவலை அறிய முடிகிறது. இதன் தொடா்ச்சியான கல்வெட்டு கிடைக்கப் பெறவில்லை. அதில் மேலும் தகவல்கள் இருக்க வாய்ப்புண்டு.

அறப் பணிக்கு தானம் வழங்கிய தகவல் இதில் உள்ளது. இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொண்டால் விரிவான தகவல்கள் கிடைக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com