இந்த நிலையில், சேகரும், சித்ராவும் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கினா். நள்ளிரவு 12 மணியளவில் மா்ம நபா்கள் இருவா் இவா்களது வீட்டுக்குள் புகுந்தனராம். இதையறிந்த சித்ரா கண் விழித்துப் பாா்த்தபோது, அவரை மா்ம நபா்களில் ஒருவா் கன்னத்தில் தாக்கினராம். இதில் சித்ரா மயங்கியதையடுத்து, அவா் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் இருவரும் சோ்ந்து பறித்துக்கொண்டு தெப்பிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.