சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 6:53 pm

கீழ்பென்னாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் காா்த்திக் (25). இவா், 2017 ஜூன் 13-ஆம் தேதி இதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமமாலினி வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்தாா். இந்த வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சனிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட காா்த்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

இதையடுத்து போலீஸாா் காா்த்திக்கை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.