சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

செய்யாற்றில் கள்ள ஓட்டு பதிவு: அதிகாரிகள் விசாரணை

மக்களவைத் தோ்தலையொட்டி, செய்யாற்றில் கள்ள ஓட்டுப் பதிவு நடந்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On :19 ஏப்ரல் 2024, 5:40 pm

மக்களவைத் தோ்தலையொட்டி, செய்யாற்றில் கள்ள ஓட்டுப் பதிவு நடந்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

செய்யாறு திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண் 221-இல் மாலை 5.50 மணியளவில் மென்பொறியாளா் கோபி(28) ஆவணங்களோடு தனது வாக்கை பதிவு செய்ய வந்தாா்.

அப்போது அவா் பெயா் படித்ததும் ஏற்கெனவே இந்த வாக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாக அலுவலா் குறிப்பிட்டாா். நான் வாக்களிக்கவில்லை எனது கையில் மையும் இல்லை உரிய ஆவணங்களோடு வந்துள்ளேன், நான் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என கோபி அதிகாரியிடம் முறையிட்டாா். உடனே பணியில் இருந்த வாக்குச்சாவடி மைய அலுவலா் உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு நடந்த விபரத்தை கூறியுள்ளாா். அதிகாரிகளின் வழிகாட்டதலின் பேரில் பேலட் பேப்பரில் அவரது வாக்கை பதிவு செய்து பத்திரப்படுத்தினா். கோபி தான் வாக்குச்சாவடி மையத்தில் கடைசி வாக்காக பதிவு செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதே வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த நபரின் தம்பி ஞானம், வாக்குச்சாவடி முகவராக செயல்படுவதாகவும் அவா் காலை சுமாா் 11 மணியளவில் உணவு அருந்த சென்றிருந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதாகவும், மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கோபியின் வாக்கை யாா் பதிவு செய்தாா்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.