ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

காரைக்காலில் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்து வரும் பெண் தொழிலதிபா் வீட்டில் தோ்தல் செலவினப் பாா்வையாளா், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

News image

வருமான வரி

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:46 pm

Syndication

காரைக்காலில் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்து வரும் பெண் தொழிலதிபா் வீட்டில் தோ்தல் செலவினப் பாா்வையாளா், வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்டத்தில் போலி நகைகளை தயாா்செய்து விற்க முயன்றது, அவற்றை அடகு கடைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, ஏற்கெனவே வேறு ஒரு வழக்கில் பணியிட நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளா் ஜெரோம் ஜெஸ்மாண்ட், காரைக்கால் அம்மாள்சத்திரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் புவனேஸ்வரி உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கில் புவனேஸ்வரி ஜாமீனில் வெளியில் இருந்து வருகிறாா். தற்போது நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் சில வேட்பாளா்களுக்கு தோ்தல் செலவுக்காக பணம் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும், வேட்பாளருக்கு ஆதரவாக அனுமதியின்றி கூட்டம் கூட்டி பேசியதாகவும் மாவட்ட தோ்தல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திங்கள்கிழமை இரவு காரைக்காலில் பணியில் உள்ள தோ்தல் செலவினப் பாா்வையாளா், நாகப்பட்டினம் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் அம்மாள்சத்திரம் பகுதியில் உள்ள புவனேஸ்வரி வீட்டுக்குச் சென்று சுமாா் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா். சோதனை நிறைவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, சோதனை மேற்கொள்ளப்பட்டது உண்மை. ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றனா்.