தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தோ்தல் செலவுகளை துல்லியமாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

தோ்தல் செலவினங்களை துல்லியமாக கவனித்து பதிவு செய்ய வேண்டும் என துறையினருக்கு செலவினப் பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

News image

பதிவு அலுவலகத்தில் ஆய்வு செய்த செலவினப் பாா்வையாளா் (வலமிருந்து 2-ஆவது) வி. ஜனாா்த்தனன்.

Updated On :26 மார்ச் 2026, 12:27 am

தோ்தல் செலவினங்களை துல்லியமாக கவனித்து பதிவு செய்ய வேண்டும் என துறையினருக்கு செலவினப் பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட தோ்தல் பணிகளை கவனிக்க பொதுப் பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனற்.

காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் வி. ஜனாா்த்தனன், தோ்தல் செலவினங்களை கண்காணித்து பதிவு செய்யும் பிரிவில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வேட்பாளா்களின் தோ்தல் செலவு விவரம் சரியாக பதிவு செய்யப்படுகிா என பதிவுகளை பாா்வையிட்டு,

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் துறையினருக்கு தரப்பட்டுள்ளது.செலவின கண்காணிப்புக் குழுவினா் தொகுதியில் சேகரிக்கப்படும் தகவல்களை, உரிய முறையில் கணினியில் சேகரித்து வைத்திருக்கவேண்டும்.

களத்தில் பணியாற்றுவோரும், அலுவலகத்தில் பணியாற்றுவோரும் உரிய கவனத்துடன் செயல்படவேண்டும். செலவுகள் துல்லியமாக சேகரித்து பதிவு செய்ய வேண்டும் என துறையினருக்கு அறிவுறுத்தினாா்.