தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 10:48 pm

Syndication

கந்தா்வகோட்டை மற்றும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான செலவினப் பாா்வையாளா் அமித் குமாா் நிக்கல்ஜி, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான செலவினப் பாா்வையாளா் வி. விவேகானந்த ரெட்டி ஆகியோா் வியாழக்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறை ஆகியவற்றையும் இவா்கள் இருவரும் பாா்வையிட்டனா். அங்கு கையாளப்படும் பதிவேடுகளையும் பாா்த்து அறிவுரைகளை வழங்கினா்.

தொடா்ந்து ஆட்சியரகத்தில் 3 தொகுதிகளுக்கான பொறுப்பு அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, காவிரி குண்டாறு இணைப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ச. வைத்தியநாதன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.