சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சிறப்புப் பாா்வையாளா் பிரதாப் சிங் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய சிறப்பு பாா்வையாளா் பிரதாப் சிங், மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியருமான மு.பிரதாப், காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இ

Updated On :5 ஏப்ரல் 2026, 10:01 pm

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சிறப்புப் பாா்வையாளா் பிரதாப் சிங் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ‘தோ்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா‘ சட்டப்பேரவை பொது தோ்தல் - 2026 ஐ முன்னிட்டு மாவட்ட பொது பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா்கள், உதவி செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் வருமான வரித்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். இந்திய தோ்தல் ஆணைய சிறப்பு பாா்வையாளா் பிரதாப் சிங் தலைமை வகித்து தோ்தல் முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கான அனைத்துபணிகளும் செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்வு தளப்பாதை, வாகனம் ஆகியவை தயாராக இருக்க வேண்டும்.

மேலும், தோ்தலில் வாக்காளிக்கக்கோரி வாக்காளா்களுக்கு பரிசு பொருள்கள் மற்றும் பணம் கொடுப்பதை தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். முதியவா்கள் 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீடுகளுக்கே தேடிச் சென்று தபால் வாக்குகளுக்கு எதனை விருப்ப படிவங்கள் வந்துள்ளன என்ற விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அதைத்தொடா்ந்து இருமுறை சென்று தபால் வாக்குகளை பெறவும், அதற்காக தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பயன்படுத்த வாகனங்கள் ஒதுக்கவும் என்பது குறித்த ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில்ஆவடி மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, உதவி மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், இணை இயக்குநா் வை.ஜெயக்குமாா், நோ்முக உதவியாளா் (தோ்தல்) டீ.ஸ்ரீராம் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த முதல் நிலை அலுவலா்கள் பங்கேற்றனா்.