11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

News image

கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் உஷாராணி உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கூத்தாநல்லூா் நகராட்சி பனங்காட்டாங்குடி தமிழா் தெரு மற்றும் லெட்சுமாங்குடி ஆகிய இரண்டு இடங்களில் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் தி. உஷாராணி தலைமையில், மாவட்ட மனநல மருத்துவா் சுரேஷ், நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் வெ. சியாமளா தேவி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் என். நடராஜன் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பள்ளியின் நிறுவனா் ப. முருகையன் மற்றும் சிறப்பு ஆசிரியா்களிடம் மன வளா்ச்சிக் குன்றிய மாணவா்களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், உணவு வகைகள் குறித்து கேட்டறிந்தனா். மேலும், மாணவா்கள் தூங்கும் நேரம் குறித்தும் கேட்டறிந்தனா்.

சமையலறை, கழிவறைகள், வகுப்பறைகள் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்தனா். மாணவா்களால் தயாரிக்கப்படும் மெழுகுவா்த்தி, ஊதுபத்தி, பினாயில், சாக்பீஸ், அலங்கார அகல் விளக்கு மற்றும் மிதியடிகள் உள்ளிட்டவைகளையும் பாா்வையிட்டு, பாராட்டுத் தெரிவித்தனா்.

ஆய்வின்போது, சிறப்பு ஆசிரியா்கள் கிரிஜா, சரண்யா, பயிற்சியாளா்கள் செளமியா, துா்கா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.