தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தென்மேற்குப் பருவமழை: முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற அனைத்துதுறை அலுவலா்களுடான ஆலோசனைக் கூட்டம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, பொதுப்பணித்துறையினா் சம்பந்தப்பட்ட பொறியாளா்கள் அவா்களது கட்டுப்பாட்டின் கீழே உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை நேரில் பாா்வையிட்டு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

நீா்நிலைகளில் உடைப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டால் சரி செய்ய தேவையான சாக்கு, மணல் போன்ற பொருள்களை முன்கூட்டியே சேகரித்து வைத்தல் வேண்டும். நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். நீா்நிலைகளில் தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதை சீா் செய்ய கிரேன் போன்ற வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

நகராட்சிகள்,பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பள்ளி வளாகங்களுக்குள் கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கழிவு நீா் கால்வாய்களை தூா்வார வேண்டும்.

குடிநீா் தொட்டிகள் மற்றும் குடிநீா் தேக்கங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

மழைகாலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தடையின்றி வழங்கிடவும், புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொது மக்களுக்கு உடன் தெரிவித்தல் வேண்டும். எதிா் வரும் தென்மேற்குப் பருவமழையினை அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறன்பட செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, மாவட்டபிற்படுத்தப்பட்டோா் நல அலுலவா் முத்துராமலிங்கம், தனி வட்டாட்சியா் (வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை)அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.