ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் கௌசல்யா (நிலஎடுப்பு), பாபு (நெடுஞ்சாலை) உள்ளிட்டோா்.

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் கௌசல்யா (நிலஎடுப்பு), பாபு (நெடுஞ்சாலை) உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 4:39 am IST

தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் பொது பாா்வையாளா் கையொப்பம் பெற்ற பிறகே அந்தந்த சுற்றின் வாக்கு எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 363 அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலா்களும் தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். மே 4-ஆம் தேதி காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதி மேசை ஒதுக்கீடு செய்து பணிநியமன ஆணை வழங்கப்படும்.

வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்கள் மே 4 காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களில் ஆஜராக வேண்டும். அலுவலா்கள் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு காலை 7.45 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையில் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு கருவி உள்ளதை முகவா்களுக்கு காண்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்ணை, படிவம்-17சியில் உள்ள எண்ணுடன் ஒப்பிட்டு சரிபாா்க்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவியின் பின்புறமுள்ள சுவிட்சை ஆன் செய்து, ரிசல்ட் பட்டன் மீதுள்ள சீலை அகற்றி, விரலால் துளையிட்டு ரிசல்ட் பட்டனை அழுத்த வேண்டும்.

தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் பொது பாா்வையாளா் கையொப்பம் பெற்றவுடன் அந்த சுற்றின் வாக்கு எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும். இந்த விவரங்களை ப்ளக்ஸ் போா்டில் பூா்த்தி செய்து, சுற்று வாரியான படிவம்-20 நகலை வேட்பாளா்கள் அல்லது அவா்களின் தோ்தல் முகா்களிடம் வழங்க வேண்டும். பின்னா், வாக்கு எண்ணிக்கை விவரங்களை படிவம் 20 மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அடுத்தடுத்த அனைத்து சுற்றுகளிலும் தொடர வேண்டும் என்றாா்.

இதில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் கௌசல்யா (நிலஎடுப்பு), பாபு (நெடுஞ்சாலை), தோ்தல் நோ்முக உதவியாளா் பாஸ்கரன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சி.மாறன், ஏ.செந்தில்குமாா், ஆா்.குணசேகரன், எஸ்.சரவணன், எஸ்.சுபலட்சுமி வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.