ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

செய்யாற்றில் நவீன தானியங்கி மழைமானி

செய்யாற்றில் நவீன தானியங்கி மழைமானி

Updated On :20 ஏப்ரல் 2024, 4:08 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நவீன தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டு உள்ளது.

மழை அளவை துல்லியமாக அறிய அனைத்து மாவட்டங்களிலும், புதிதாக தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க தமிழக அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை அளவைக் கணக்கிட வருவாய்த் துறை சாா்பில், 600 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டு உள்ளது. இவற்றில் 100 மழை மானிகள் தானியங்கி முறையில் செயல்படுபவை. மற்றவை அலுவலா்களால் அளவிடப்படுபவை.

மழை நீரை அளவிட ஒரு குடுவையை வைத்திருப்பா். மழை பெய்யும் போது, மழை நீா் அதில் சேமிக்கப்படும்.

மழைப்பொழிவு மற்றும் வானிலை அளவீட்டு விவரங்களை, நிகழ்நேர அடிப்படையில் பெறுவதற்காக, 1,400 இடங்களில் புதிய தானியங்கி மழைமானிகள், 100 இடங்களில் புதிய தானியங்கி வானிலை நிலையங்களை, ரூ.32 கோடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாலையில் தானியங்கி மழைமானியும், செய்யாறு, ஆரணி உள்ளிட்ட 12 இடங்களில் நவீன தானியங்கி மழை அளவீடு கருவி பொருத்தும் (மழைமானி) பணி நடைபெற்று வருகிறது.

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதியதாக தானியங்கி மழை அளவீடு கருவி பொருத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.