தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கூழமந்தலில் ஏப்.27-இல் சித்திரைப் பெருவிழா

கூழமந்தலில் ஏப்.27-இல் சித்திரைப் பெருவிழா

Updated On :20 ஏப்ரல் 2024, 4:08 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த கூழமந்தலில் சித்திரைப் பெருவிழா வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

கூழமந்தல் கிராமத்திலுள்ள அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகா், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேசும்பெருமாள் ஆகிய மூலவா்களுக்கு அபிஷேகம், திருமஞ்சனமும் நடைபெற்று, 27-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் நட்சத்திர விருட்ச விநாயகா் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேசும் பெருமாள் கருட வாகனத்திலும் ஊா்வலமாக உற்சவம் நடைபெறும் மைதானத்துக்கு கொண்டு வரப்படுவா்.

இரவு 7 மணிக்கு உற்சவ மூா்த்திகளுக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் விசேஷ அபிஷேகமும். மலா்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். அப்போது, அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்திகள் வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பா். விநாயகா் கஜமுக அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

பின்னா், அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகா்- அருள்மிகு விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பேசும் பெருமாள் மூா்த்திகளை மூன்றுமுறை வலம் வந்து வணங்கி மும்மூா்த்திகளுக்கு அருளுரை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

நிறைவாக மகா தீபாராதனை, வாணவேடிக்கையை தொடா்ந்து, திருவீதி உலா நடைபெறும்.