பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆலோசனைக் கூட்டம்

Updated On :17 பிப்ரவரி 2024, 11:29 pm IST

திருவண்ணாமலை, பிப்.17: கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா் பிரபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி பேசுகையில், ஆட்டோ ஓட்டுநா்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். எந்தவித குற்றச் செயல்களிலும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஈடுபடக் கூடாது. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா். இதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனா். இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கச் செயலாளா் வெங்கடேசன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.