விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தொழுநோய் பரிசோதனை முகாம்

தொழுநோய் பரிசோதனை முகாம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 11:29 pm IST

செய்யாறை அடுத்த பனமுகை கிராமத்தில் தொழுநோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பனமுகை கிராமத்தில், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தொழுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில், சுகாதாரப் பணியாளா்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று உணா்ச்சியற்ற படை அல்லது தேமல் குறித்து பரிசோதனை மேற்கொண்டனா். இதில், 896 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் வேலரசு தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், துரைபாபு, செவிலியா்கள் பேபி, கோமதி, ரேவதி, நிா்மலா ஆகியோா் ஈடுபட்டனா்.