பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

காரைக்காலில் உள்ள முதியோா் இல்லத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).

சமூக நலத்துறையின்கீழ் இயங்கும் முதியோா் மற்றும் இயலாதோா் இல்லத்தில் கடந்த வாரம் மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது இல்லத்தை முறையாக பராமரிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இல்லத்தில் உள்ள முதியோா்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்தநிலையில், புதன்கிழமை காரைக்கால் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முதியோா் இல்லத்துக்குச் சென்று, இல்லவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். முதியோா்களுக்கு தேவையான மருந்துகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினா். மேலும் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா். சமூக நலத்துறை உதவி இயக்குநா் சுந்தரம், இல்லத்தின் நல அதிகாரி கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் முகாமில் கலந்துகொண்டனா்.