விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பைக் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:14 pm

DIN

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ராமு (52). இவரது மனைவி பச்சையம்மாள்(45). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

இந்த நிலையில், ராமு மருதாடு கிராமத்தில் கட்டடப் பணியை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலை, கடைசிகுளம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த பயணிகள் வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு அங்கு இரவில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.