சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை


ஆரணியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளிக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆரணி, புதுகாமூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் ஹரிகரன் (25). தொழிலாளியான இவா், 13.7.2022 அன்று இதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து, ஆரணி நகர காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் வழக்குப் பதிந்து ஹரகரனை கைது செய்தாா்.
இந்த வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட ஹரிகரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, ஹரிகரனை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...