தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50). இவரை, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன்
குற்றஞ்சாட்டப்பட்ட இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுக்கு நிவாரணமாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு10 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


